Tuesday, 28 June 2016

போதைக்கு பெண்கள் விதிவிலக்கா? (Female Alcoholism)


பள்ளிமாணவிகள் தேர்வு முடிந்ததை கொண்டாடும் விதமாக ஒன்றுசேர்ந்து மதுஅருந்துவது போன்ற படங்கள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வளர்இளம் பெண்கள் போதைப்பொருட்களை உபயோகிப்பது கணிசமாக அதிகரித்திருந்தாலும், ஆண்களிடமிருந்து அவர்களை வித்தியாசப்படுத்துவது ஒரே விஷயம் தான். வளர்இளம் பெண்கள் போதைப்பொருட்களை கூட்டமாக, கொண்டாட்டங்களின் போது மட்டும் தான் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இன்னும் சில சமூகரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆண்களைப் போல தனிமையில் போதை சுகத்திற்காக மட்டும் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிக அளவில் இன்னும் வரவில்லை. ஆனால் அதைநோக்கி முன்னேறி சென்றுகொண்டிருப்பது அதிர்ச்சியான செய்தி தான்..


           வளர்இளம் பெண்களின் போதைப்பழக்கத்திற்கும் இளவயது கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களுக்கும் நேரடிதொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பெண்கள் 100 மில்லி லிட்டர் குடிப்பது ஆண்கள் 300 மில்லி லிட்டர் குடிப்பதற்கு சமம். அத்தனை எளிதில் ஆண்களை விட எளிதில் போதைக்கு அடிமையாகும் அளவிற்கு அவர்களின் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. மேலும் ஆண்களை ஒப்பிடும்போது மது அருந்தும் பெண்கள் வெகு சீக்கிரத்திலேயே கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கர்ப்ப காலத்தில் மது அருந்துவது வளரும் சிசுவின் வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல், மனவளர்ச்சி குறைபாடோடு பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளை மட்டும் கண்காணித்தால் போதும், பெண்பிள்ளைகளை பாதுகாத்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடுவது நல்லதல்ல. 

Monday, 27 June 2016

ஆபத்தான நட்பும், தனிமையும் (Alcohol and peer pressure)


நட்பு வட்டம்

பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு போதைப்பழக்கங்களின் அறிமுகம் நண்பர்கள் மூலம் தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாக தூண்டுதல்கள், போதைப்பொருள்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவை ஒருமுறை முயற்சிசெய்து பார்த்தால் தான் என்ன, என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாட ஆரம்பிக்கும் இந்த பழக்கம், நாளடைவில் எல்லா சூழ்நிலைகளிலும் எடுக்கும் அளவுக்கு கொண்டுபோய்விடும். பின்பு குடிப்பதற்கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதை குடிப்பதற்கு சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை எற்படும்.  மனதிற்கு உற்சாகம் இல்லாத நேரங்கள் மற்றும் தோல்விகளால் துவண்டு இருக்கும் நேரங்களில் “சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து போய்விடும்” என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்கு போதைப்பழக்கத்தின் முதல்படியாக அமைந்துவிடும். எனவே இதுபோன்ற

போதைப்பழக்கம்-குடும்பவியாதியா? (Alcohol addiction-Role of family)


      ‘இளமையில் கல்’ என்பதை ‘இளமையில் கள்’ என நம் இளைஞர்கள் புரிந்துகொண்டார்கள் போலும். இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரிவயது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது மிகவும் ஆபத்தான விஷயமும் கூட. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் முதல் ஆரம்பித்து கஞ்சா, ஹெராயின் உட்பட பலவகையான போதைப் பழக்கவழக்கங்கள் வளர் இளம்பருவத்தினரிடையே நிலவிவருகிறது. இந்த போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் ஏற்படுவது அல்ல. நாம் சாப்பிடும் மிக்சர் போல குடும்பச்சூழல், சமுதாயம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, தனிப்பட்ட குணநலங்கள் மற்றும் மரபணு மாற்றங்கள் ஆகியவை சேர்ந்த கலவைதான் ஒருவரின் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் தன்மையை தீர்மானிக்கிறது.
குடும்பச்சூழல்
 ஒரு குழந்தை வளரும்போது நல்ல குடும்பச்சூழல் தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. வளர்இளம் பருவத்தில் தான் ஒருவரின் குணநலங்கள் முதிர்ச்சி அடைய

Saturday, 11 June 2016

யார் உங்கள் ஆசிரியன்? (Teacher-student-Internet)


இணையதளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பயன்பாட்டுக்கு பின்பு ஆசிரியர் மாணவர் உறவுகளில் பெரிய இடைவெளி ஏற்பட்டு வருவதாக சமீபத்தில் நான் பேசுவதற்காக சென்ற ஆசிரியர்கள் கூட்டத்தின் முடிவில் பல கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இண்டர்நெட்டில் தேடி பதில் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துக்களை கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரங்களில் சமூகவலைதளங்களை தைரியமாக பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையை நிர்பந்தித்தது தான்.
அறிவா? தகவலா?

‘எல்லாம் தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதை கவனிக்கவேண்டும்’ என்ற எண்ணம் பரவலாக மாணவர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. சமூகவலைதளங்களின் மூலமாக தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அவை அறிவுசார்ந்த ( Knowledge )  விஷயங்களாக இருக்க முடியாது. மாறாக அவை தகவல் சார்ந்த ( Information ) விஷயங்களாக மட்டும் இருப்பின் பல சமூக சிக்கல்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற சர்க்கரை வியாதிக்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது சர்க்கரை வியாதிக்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்து கொண்டால் அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத்துறையில் உடல்பருமனைக் குறைக்கவும், சில கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பலருக்கு தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம். இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, டாக்டர் குழந்தையின்மைக்கு சுகர் மாத்திரையை தவறாக கொடுத்து விட்டார் என்ற செய்தியை பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது மருத்துவத்துறையை மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தை தேடிப்பார்த்து தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டு பார்ப்பதே மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்

இண்டர்நெட்-எளிதில் அடிமையாவது யார்? (Risk factors for internet addiction)


தனிமையில் இனிமை
காற்று புகமுடியாத இடங்களில் கூட நுழைந்துவிடும் இணையதளம், அலைக்கற்றைகள் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுவதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்வரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளை பெற்றோர் நேரடியாக கண்காணிக்க முடிந்த்து. “இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற’ என்று பெற்றோரோ, ‘ உங்க பையன் பஸ் ஸ்டாண்டு கிட்ட ஒரு பொண்ணுகிட்ட  ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததை பாத்தேனே’ என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இண்டர்நெட் உலகத்தில் நடப்பதை கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் வலைதளம், மொபைல் போனை உபயோகிப்பதற்கு நேரம் காலம் கிடையாது.
எளிதில் அடிமையாவது யார்?
இணையதளத்தை உபயோகப்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ அது போல சில குறிப்பிட்ட பிரச்சனையுள்ள வளர் இளம்பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
Ø  மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
Ø  இயற்கையாகவே அதிக பதற்ற தன்மை உள்ளவர்கள்
Ø  கூச்ச சுபாவம் உள்ளவர்கள்
Ø  படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்
Ø  கற்றல்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்
Ø  சமூக பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே  கிடைக்கும் குழந்தைகள்
Ø  அதிக துறுதுறுப்பு மற்றும் கவனக்குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள் (ADHD)
Ø  மிதமான அளவு ,ஆட்டிசம் (Autism) என்ற பாதிப்புக்குள்ளானவர்கள்
Ø  தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள்
Ø  அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்
Ø  சிறுவயதிலேயே சமூகவிரோத செயல்கள் மற்றும் வேறு போதைப்பழக்கங்களுக்கு ஆளாகும் வளர் இளம்பருவத்தினர்
என்ன காரணம்?
வளர் இளம்பருவத்தில் “நீ படிப்பதற்காக மட்டும் தான் நேர்ந்து விடப்பட்டிருக்கிறாய்” என்ற அளவிற்கு பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படும்போது அதை ஆரோக்கியமாக கையாள தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியினால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்பு கம்பளம் விரித்த கனவு உலகம் போல காட்சியளிப்பதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு
  • வளர் இளம் பருவத்தினருக்கு தங்கள் மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது
  •  அதிக எதிர்பார்ப்பை திணிக்கும் உலகத்திலிருந்தும், தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது
  • முகம் பார்த்து பேச தேவையில்லாத இணையதள உலகம், அவர்களின் கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாக குறுந்தகவல்கள் மூலமாக எல்லா கருத்துக்களையும் பரிமாறும் மேடையாகின்றது
  • உண்மை உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர் இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் பெறலாம்

Friday, 3 June 2016

வலைவிரிக்கும் வலைதளம் (Signs of Internet addiction)


“என் பையனுக்கு மொபைல் போன்ல உள்ள எல்லா அப்ளிக்கேசனும் அத்துப்படி”, “மூணு வயசுலேயே எல்லா கேம்ஸையும் இன்டர்நெட்டை ஆன் பண்ணி அவனாகவே டவுன்லோட் செஞ்சிருவான்”, “பேஸ்புக்குல இப்பவே அவனுக்கு 200 ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா?” என்று மெய்சிலிர்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் பலர் சில வருடங்கள் கழித்து பள்ளி ஆசிரியரிடமோ அல்லது மருத்துவரிடமோ “24 மணிநேரமும் நெட்லயே இருக்கான், ஸ்கூலுக்கு போகமாட்டேனு அடம்பிடிக்கிறான், ஸ்மார்ட்போன் வாங்கி குடுத்து மாசாமாசம் டேட்டா ரீசார்ஜ் பண்ணலனா காலேஜ் போகமாட்டேனு சொல்லி வீட்டுல உள்ள பொருள்களை எல்லாம் உடைக்கிறான்” என்ற புகாருடன் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்டர்நெட் போதை
இன்டர்நெட் அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது ‘என்ன பாஸ் நீங்க, எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க, மனநல பாதிப்புனு சொல்றீங்க, அதனால எத்தனை நல்ல விசயங்கள் இருக்கு, நாங்க என்னதான் பண்றது’ என்று கேட்டார்.

இண்டர்நெட் தொற்றுநோய் (Infectious Internet addiction)


நாம் பயன்படுத்தும் பென்சில் மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக இருந்தாலும், அவைகளை உருவாக்க ஒரு மரம் பலியாகி உள்ளது என்பதை மறுக்க இயலாது. அது போலத்தான் தகவல் தொழில்நுட்பத்தில் வரும் புதிய கண்டுபிடிப்புகளினால் பல நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இல்லாமல் இல்லை.
மீம்ஸ் கலாச்சாரம் ( Memes )
ஒரு படத்தை அல்லது ஒருவரின் கருத்தை, நகைச்சுவை உணர்வை கலந்து வலைதளங்களில் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தான் மீம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்ட இது இன்று பிறரை கேலிசெய்யவும், மனதைப் புண்படுத்தவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது ஒரு ஆரோக்கியமற்ற சமூக சூழலை உருவாக்கிவருகிறது. ஒரு தனிநபரையோ, அரசியல் தலைவரையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ இன்று இதன் மூலம் உலகம் அறிய தாக்குவது மிகவும் எளிது. மேலும் இதன் மூலம் ஒரு தரமான,நல்ல கருத்தை நீர்த்துபோகவும் செய்யலாம் .அல்லது விவாதத்திற்கே தகுதியில்லாத ஒரு விஷயத்தை மிக முக்கியமான கருத்தாக எல்லோர் கண்களுக்கும் பூதாகரப்படுத்தி காண்பிக்கும் மாயக்கண்ணாடியாக கூட இதை பயன்படுத்தலாம்.
பாதிப்பின் தீவிரம்
வள்ளுவர் சொன்ன ‘நாவினால் சுட்ட வடு’ கூட சிலகாலங்களில் ஆறிப்போகலாம். ஆனால் இது போன்ற சமூகவலைதள தாக்குதல்களின் சிறப்பம்சம்