Tuesday, 19 July 2016

இண்டர்நெட்-விழிப்புணர்வு அவசியம்



251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பனை என்று அறிவிப்பு வந்த இரண்டு நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு செய்ததால், அந்த நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டதாம். இது நம் மக்களின் மோகம் போகும் வேகத்திற்கான ஒரு சான்று தான். எல்லாம் டிஜிட்டல் மயமாவது பல சவுகரியங்களை தந்தாலும் அதில் உள்ள பிரச்சனைகளை வழக்கம் போல நம் அதிகார வர்க்கங்கள் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநல பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநல பாதிப்புகள் ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பத்து வருடங்கள் முன்னோடியாக சீனாவும், தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியை பின்பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது

No comments:

Post a Comment