- Ø தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளி விளையாட்டுகளில் ஈடுபடுதல் நல்லது
- Ø குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மன பாரங்களை பகிர்தல் அவசியம்
- Ø புத்தகங்கள் வாசிப்பது, இசைக்கருவிகளை வாசிக்க பயிற்சி எடுக்கலாம்
- Ø நேரத்தை பகிர்ந்து செலவிட கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)
- Ø வேலைகளை பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது மற்றும் பெரிய வேலைகளை பகுதிபகுதியாக பிரித்து செயல்படலாம்
- Ø பிரச்சனைகள் எப்போதுமே நிரந்தரமானது அல்ல, பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளவேண்டும்.
- Ø பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து பிடித்து, சில நொடிகளுக்கு பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விடவேண்டும்.
- Ø பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவி கட்டாயம் தேவைப்படும்.
- Ø தீவிரமான மனஅழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாக பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும்.
Labels
Thursday, 26 May 2016
மன அழுத்தநோய்: தடுப்பு மற்றும் சிகிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment