சற்றே பழைய காலத்து செய்தி என்றாலும் வரலாற்றில் மறக்க,
மறைக்க இயலாத ஒரு நிகழ்வு. ஒரு தவறான செய்தி எப்படி பரவுகிறது, அது எப்படி ஒரு
சாதாரண மனிதனையும் கலகக்காரனாக மாற்றுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதற்கு இதைவிட
பெரிய உதாரணம் இருக்க முடியாது. அதுவும் தகவல் தொடர்பு என்பது கடித அளவில் மட்டுமே
இருந்த காலத்தில். ஆனால் அது கற்றுக்கொடுத்த பாடம் மிகப்பெரியது
சாலெம் சூனியக் கலகம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மசாசுசெட் ( தற்போதைய டேன்வர்
) என்ற பகுதியில் 1692 ஆம் ஆண்டு சில இளம் சிறுமிகளுக்கு திடீரென்று ஆக்ரோஷம்,
வலிப்பு, பேய் பிடித்தது போல பேசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. அவர்களை
மருத்துவர் பரிசோதிக்கும்போது