Thursday, 30 April 2015

கலகக்கூட்டம் (MOB)


சற்றே பழைய காலத்து செய்தி என்றாலும் வரலாற்றில் மறக்க, மறைக்க இயலாத ஒரு நிகழ்வு. ஒரு தவறான செய்தி எப்படி பரவுகிறது, அது எப்படி ஒரு சாதாரண மனிதனையும் கலகக்காரனாக மாற்றுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் இருக்க முடியாது. அதுவும் தகவல் தொடர்பு என்பது கடித அளவில் மட்டுமே இருந்த காலத்தில். ஆனால் அது கற்றுக்கொடுத்த பாடம் மிகப்பெரியது
சாலெம் சூனியக் கலகம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மசாசுசெட் ( தற்போதைய டேன்வர் ) என்ற பகுதியில் 1692 ஆம் ஆண்டு சில இளம் சிறுமிகளுக்கு திடீரென்று ஆக்ரோஷம், வலிப்பு, பேய் பிடித்தது போல பேசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. அவர்களை மருத்துவர் பரிசோதிக்கும்போது

Wednesday, 29 April 2015

தூகத்தில் சிறுநீர் கழித்தல் ஒரு பிரச்சனையா? (Bedwetting)


தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளிடம் அடிக்கடி காணப்பட்டால் மனநல ஆலோசனை அவசியம். இதில் இரண்டு வகைகள் உண்டு. உதாரணமாக முதல் வகையில் பிறந்தது முதல் 10 அல்லது மேற்பட்ட வயது வரை கூட தொடர்ச்சியாக சிறுநீர் கழிப்பது பிரச்சினையாக இருக்கலாம். இப்பிரச்சினைக்கு நரம்பு அல்லது சிறுநீரக மண்டலங்களின் வளர்ச்சி குறைபாடு காரணமாக இருக்கலாம். இரண்டாம் வகையில் ஒரு குழந்தை 4 வயதிற்குள் தூக்கத்தில் முழுக்கட்டுப்பாட்டை

தூக்கத்தில் பேசுதல் & நடத்தல் ( Sleep walking & talking)


ஒரு மனிதனுக்கு சராசரியாக 6 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரம் அளவிற்கு தூக்கம் அவசியம். இது வயதைப்பொறுத்து மாறும். மனிதனின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தூக்கம் சரியாக அமைவது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பல உடல்நலக்குறைவுகள் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் தூக்கமின்மைக்கு முக்கிய காரணங்களாகும். மன அழுத்தம், பதட்டம் உட்பட பல காரணங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். தூக்க வியாதிகள் என்பது தூக்கத்தின் நேரம் குறைவது மட்டுமல்ல. போதுமான நேரம் தூங்கினாலும்

Monday, 27 April 2015

மனநோய்-நிஜமும் நிழலும் (Mental illness-Facts and Myths)


5 ல் ஒரு இந்தியர் தனது வாழ்வில் ஒரு முறையாவது மனநல மருத்துவம் செய்து கொள்ளும் அளவிற்கு லேசான அல்லது தீவிரமான மனநோயின் பாதிப்பிற்கு ஆளாகின்றார்.சராசரியாக 5-15% பேர் தீவிர மனஅழுத்த நோயினாலும்(depression), குறிப்பாக பெண்கள் சராசரிக்கு அதிக அளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஸ்கிஷோஃப்ரினியா(schizophrenia) என்று அழைக்கப்படும் மனச்சிதைவு நோய் ஆயிரத்தில் 3-4 பேரை பாதிக்கின்றது.90% வரையிலான ஆண்கள் வாழ்கையில் சில காலங்களாவது மது உட்பட போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.அதில் 50% க்கும் அதிகமானோர் போதைக்கு அடிமையாவதுடன் பலர் மனநோயினாலும் பாதிக்கபடுகின்றனர்.நாளொன்றிற்கு 350-400 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.குறிப்பாக தமிழ்நாடு இதில் முதல் இடம் வகிக்கின்றது.இந்தியாவில் சராசரியாக 30-35 லட்சம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் டெமன்ஷியா(dementia) எனும் ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மனிதனுக்கு உடல் நலம் எப்படி முக்கியமானதோ அந்தளவிற்கு மனநலமும் இன்றியமையாதது.உடல் உறுப்புகளை நோய்கள் தாக்குவது போல மனமும்

யார் உங்கள் குடும்ப மருத்துவர்? ( Who is your family doctor?)


ஒரு நகைச்சுவை காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியை சுற்றி பல டாக்டர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், உடனடியாக குடல் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்கவேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்டவேண்டும் என்றும் கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்களும் ஒவ்வொன்றை கூற நோயாளி மயங்கி விடுவார். இது ஒரு நகைச்சுவைகாகத்தான் என்றாலும் பதினந்து முதல் இருபது வருடங்களுக்கு முன்பு வரை இருந்து தற்போது மறைந்து வரும் மருத்துவ உலகின் ஒரு உண்மையை நினைவு கூற வேண்டிய கட்டாயமும் உள்ளது.
யார் இந்த குடும்ப மருத்துவர்?
இது ஒரு டாக்டர் பேமிலி என்று சொல்ல கேள்விபட்டிருப்போம். ஆனால் பேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர்

அனபாலிக் ஸ்டீராய்டு மனநல பாதிப்புகள் (Anabolic steroids)


அனபாலிக் ஸ்டீராய்டு இந்த வகை மருந்துகள் கேன்சர், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க மருத்துவதுறையில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இது மனித உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் (testosterone) என்ற ஹார்மோனை ஒத்த ஒரு மருந்தாகும். இது உடலின் தசைநார்களை பெருக்கமடையச் செய்து நல்ல புஷ்டியான தோற்றத்தை தரும் தன்மையுடையது.
தவறான உபயோகம்
இன்றைக்கு இளம் பெண்கள் பிரபல நடிகைகளைப் போல மெலிவான உடலமைப்பை பெற எவ்வாறு ஆசைப்படுகிறார்களோ, அதுபோல இளைஞர்கள் அர்னால்டு போல உடம்பில் பல படிக்கட்டுகளை வளர்க்க விரும்புகிறார்கள். எனவே உடற்பயிற்சிக் கூடங்களை நாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் சீக்கிரம் உடல் தசைபருமனை பெருக்க இந்த அனபாலிக் ஸ்டீராய்ட் மருந்துகளை ஊசிகளாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ உட்கொள்கின்றனர். மேலும் இந்த மருந்துகள் அதிக உத்வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் தருவதால் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் இளைஞர்களால்

ஆவிவடிவில் ஒரு ஆபத்து (Inhalant substance abuse)


பொதுவாக போதை பொருட்களை உபயோகிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது எளிது. ஆனால் தற்போது பிரபலமாகி வரும் சில போதை பொருட்கள் நிழல் உலக தாதாக்கள் போல. இவை வெளியில் தெரிவதில்லை, கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இவை இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களையும் சிறுவர்களையும் கிருமி போல் ஊடுறுவிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும்.
ஆவிவடிவில் ஒரு ஆபத்து
ஒருமுறை பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனின் நடவடிக்கைகளில் பல நாட்களாக மாற்றம் தெரிவதாகவும், அவன் அடிக்கடி தனது கர்சீப்பில் ஏதோ ஒன்றை வைத்து உறிஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்ததாகவும்  கூறினார். அதை வாங்கி பார்த்தால் பேனா எழுத்துக்களை மறைக்க பயன்படுத்தும் ஒயிட்னர்

Saturday, 25 April 2015

மனச்சிதைவு- உள் மற்றும் வெளிப்பார்வை (Schizophrenia- view from patients and society)


நோயாளியின் பார்வையில்

மனச்சிதைவு நோயாளியின் அறிகுறிகளெல்லாம் நமக்கு வித்தியாசமாக தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் உண்மையில் நடப்பது போல் தான் இருக்கும். அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்களால் குடும்ப நபர்கள் பல இன்னலுக்கு உட்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் புரிந்து கொள்வது மிக அவசியம். தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் என்று சொல்லப்படுவது உண்டு. அது போலத்தான் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்படும் நபர்களுக்குத் தான் அதன் வேதனை தெரியும். உதாரணமாக நாம் தனியாக இருக்கும்போது சில குரல்கள் மட்டும் நம்மை மிரட்டுவது போலவோ, மாடியிலிருந்து குதித்துவிடு என்று சொல்வது போலவோ கேட்டுக்கொண்டே இருந்தால் நமக்கு எவ்வளவு பயம் வரும். உண்மையில் வீட்டின் வெளியே

மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் (Symptoms of Schizophrenia)


அறிகுறிகள் என்ன?
  • நிஜத்தில் நடக்காத அல்லது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை உண்மையில் நடப்பது போல் மிக உறுதியான எண்ணம் கொண்டிருத்தல். உதாரணமாக ஒருவருக்கு எதிரிகள் இருப்பது போன்றோ அல்லது வீட்டில் உள்ளவர்கள் அவரை விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாக நினைத்தல், எல்லோரும் தன்னைக் குறித்தே கேலி அல்லது ரகசியம் பேசுவது போலவும் தோன்றுதல்.
  •   தன்னை கடவுளாகவோ, தனிச்சிறப்பு பெற்ற பிறவியாகவோ காண்பித்துக்கொள்ளுதல்
  •   வாழ்க்கை துணையின் மீது காரணமற்ற சந்தேகம், வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறான, தீவிரமான சந்தேக எண்ணம்
  •   மனதிற்குள் யாரோ

குழந்தைகளை எப்படி தண்டிப்பது? (how to punish children?)


தண்டனைகள் தேவையா?
பள்ளி ஆசிரியர் என்றாலே கையில் கம்புடன் நிற்பது தான் மனதில் பிம்பமாய் தோன்றும். ஆனால் இன்றைய நிலைமை வேறு, கம்பு எடுத்தால் அவருக்கு கைவிலங்குதான். குழந்தைகளுக்கு தண்டனைகள் கண்டிப்பாக தேவைதான், ஆனால் கொடுக்கும் விதம் அதைவிட அவசியம்.
  • தவறான செயல்கள் அவற்றின் தீவிரத்திற்கு ஏற்ப உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். காலம் தாழ்த்துவது எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.
  • தண்டனைகள் வயதுக்கு ஏற்றவையாக இருத்தல் அவசியம். ஆத்திரப்படுதலை தவிர்ப்பது நலம்.
  • குழந்தைகளுக்கு நாம் ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பது கண்டிப்பாக புரிந்திருத்தல் அவசியம்.
  • அறியாமல் செய்த தவறுகளை தண்டிக்க கூடாது. உதாரணமாக கையில் உள்ள டம்ளர் தவறி விழுவதால்

குழந்தையை கையாளும் முறைகள் ( handling children)


பொதுவாக கையாள வேண்டிய விஷயங்கள்
  • நாட்டமுள்ள நல்ல விஷயங்களை ஊக்குவிப்பது, தகுதி மற்றும் வயதுக்கு மீறிய விஷயங்களை தடை செய்வது
  • பிள்ளைகளின் தேவைகளை சரியாக புரிந்து கொள்ளுதல்
  • நம் விருப்பங்களை பிள்ளைகளிடம் ஒரு அளவுக்கு மேல் திணித்தல் கூடாது.
  • பெற்றோரின் மனநிலை, கோபங்கள், மனஸ்தாபங்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தல் தவிர்க்க வேண்டும்
  • மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற விஷயங்களில் கண்டிப்பை தளர்த்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அடிக்கிறது அல்லது கடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர் அதை கண்டிப்பார்கள், சில நேரங்களில்

யார் குழந்தையின் பெற்றோர் ( Who are the real parents?)


ஓடி விளையாடு பாப்பா என்று அறைகூவல் விடுத்த பாரதி இன்று மட்டும் இருந்திருந்தால் வீடியோகேமில் ஓட்டி விளையாடு பாப்பா என பாடியிருப்பார். கால் வலிக்க தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய் காசு கொடுத்து கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்து விட்டோம். கோடை விடுமுறை வேறு ஆரம்பித்துவிட்டது, பள்ளிநாட்களில் வீட்டில் இருக்கும் சில மணிநேரங்களிலேயே களபேரத்தை ஏற்படுத்தும் பிள்ளைகளை இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கபோகிறோமோ என்று பெற்றோர் புலம்புவதும் கேட்கத்தான் செய்கிறது.
கற்றலும் குணநலமும்
குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு

மனச்சிதைவு நோய் (What is Schizophrenia?)

  

மனிதனின் மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலை போலத்தான். பல விஷயங்களை உள்வாங்கி, உருவாக்கி, வெளிக்கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஏன், தூக்கத்தில் கூட கனவுத் தொழிற்சாலை இயங்குவதால் மனதிற்கு ஓய்வு என்பதே கிடையாது.
மனச்சிதைவு என்றால் என்ன?
மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பலர் திணறுவது உண்டு. நம் எண்ணங்களில் நிகழும் செயல்பாடுகள், ஜம்புலங்களின் உணர்ச்சிகள், பேசுவது மற்றும் பிறர் பேசுவதை புரிந்துகொள்ளுதல், விஷயங்களை பகுத்தாய்தல், கவனம் மற்றும் ஈடுபாடு, சமுதாயம் சார்ந்த பழக்கவழக்கங்கள் போன்ற பல விஷயங்கள் அன்றாட வாழ்விற்கு மிக முக்கியமானவை. இவை

Friday, 17 April 2015

வாட்ஸ்அப்-காத்திருக்கும் ஆபத்து ( Dangers of Whatsapp)

சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உபயோகிப்பது தற்போது மாணவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவருகிறது. ஒரு பழக்கமாகவோ, பொழுதுபோக்கு அம்சமாகவோ ஆரம்பிக்கும் இது பலருக்கு ஒரு போதைப்பொருளாகவே மாறிவிடுவது தான் அபாயமான ஒன்று.
அடிமையாதலின் அறிகுறிகள்
நாளுக்கு நாள் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல், மற்ற முக்கிய வேலைகளை ஒதுக்கிவிட்டு இதற்கு மிக முக்கியம் கொடுப்பது, ஒரு நாள் கூட மொபைல்போனோ அல்லது இன்டர்நெட் தொடர்போ இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை