Wednesday, 18 November 2015

பாலியல் கல்வியில் பெற்றோரின் பங்கு (பதின் பருவம் புதிர் பருவமா?)

      
  • "இந்த வயதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான், நாங்களும் அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம்" என்று கூறி ‘தாங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படுகிறோம்’ என்ற உணர்வை விடலைப் பருவத்தினரிடம் ஏற்படுத்துங்கள்.
  • செக்ஸைப் பற்றி பேசித் தேவையில்லாமல் நாமாகவே அந்த எண்ணத்தை விதைத்துவிடுவோமோ என்ற பயம் வேண்டாம். அது இயல்பானது. அந்த வயதுக்குரியது.
  • வாரிசுகளின் சங்கோஜமான அல்லது முரண்பாடான கேள்விகளாலோ கருத்துகளாலோ கோபமோ பதற்றமோ அடையாதீர்கள். மாறாக "நீ இப்படி வெளிப்படையாகக் கேட்பது எனக்குப் பிடித்திருக்கிறது. பிரச்சினையைத் தீர்க்க இதுதான் முதல் படி" எனப் பாராட்டுங்கள்.
  • பாலியல் குழப்பங்கள், பாலியல் சார்ந்த வன்முறைகளால் ஏற்படும் மன உளைச்சல்கள், இளம் வயது கர்ப்பம், பால்வினை

செக்ஸ் கல்வியின் தேவை (பதின் பருவம் புதிர் பருவமா?)

வயது ரீதியான சாதாரண உடல், மன மாற்றங்களைப் பற்றி அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் விடலைப் பருவத்தினர் தொடர்ந்து உழன்றுகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையும், வெளியில் சொல்ல வெட்கப்படுவதும்தான். சிறுநீரகத்தில் கல்லடைப்புக்கு எந்த மருத்துவரைப் பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று அது தொடர்பாகச் சிகிச்சை பெற்ற ஒருவரிடம் கேட்கலாம். ஆனால், பாலியல் சந்தேகங்களை யாரிடம் கேட்பது? பலருக்கும் இப்படிச் சந்தேகங்கள் நீண்டுகொண்டே போகும்.
கடைசியில் முறைசார்ந்த பயிற்சி பெற்ற மருத்துவருக்குப் பதிலாக, விளம்பரங்களால் கவரும் போலி மருத்துவர்களிடம் சரணடைந்து விடுவதுதான் பலரும் சென்றடையும் தவறான பாதையாக இருக்கிறது. வளர்இளம் பருவத்தினரிடம், பெற்றோர் நல்ல நண்பனைப்போல நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் வலைதளங்கள்

கண்களை மறைக்கும் காதலும் காமமும் (பதின் பருவம் புதிர் பருவமா?)

        
‘நான் எனது குழந்தைகளை வெளியில் படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உறவு வைத்துக்கொள் என்றே சொல்லி அனுப்புவேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கூறினார். அந்த நேரத்தில் அவர் கூறியது எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. ஆனால், இப்போது செக்ஸ் சார்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அவர் கூறியதைவிட நெருடலாக இருக்கும் அளவுக்குப் போய்விட்டன.
மேற்கத்தியக் கலாச்சாரத்தால் உலகெங்கும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றங்களில் நம்மில் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒன்று: வளர் இளம்பருவத்தில் கர்ப்பமாதல்!
மேற்கத்திய நாடுகளில் இரு பாலினத்தவரும் 16 அல்லது 17 வயதில் முதன்முறையாகப் பாலியல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். அங்கு எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே தங்களுடைய முதல் உடலுறவு அனுபவத்தைப் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அது போன்ற விரிவான புள்ளிவிவரங்கள்

சுய இன்பம் பாவமா-masturbation (பதின் பருவமா, புதிர் பருவமா?)

          
            எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது பற்றிய சந்தேகமும் பயமும் இளம்பருவத்தினரை எப்போதும் தொற்றிக்கொண்டே இருக்கும் வேதாளம் போன்றது. சுயஇன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்ட்ருபேஷன் (Masturbation) என்று பெயர்.
இந்தப் பழக்கம் மூன்று வயது சிறுவர்களிடம்கூட, வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் காணப்படும் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று வயதில்தான் ஒரு குழந்தைக்குத் தான் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு புரிய ஆரம்பிக்கும். இன்பம் பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பாலுறுப்பைத் தூண்டுவது இயற்கையான ஒன்று. இது காலப்போக்கில் மாறிவிடும்.
முதல் அறிமுகம்
இந்தப் பழக்கம் பெரும்பாலும் நண்பர்களின் மூலமாக அறிமுகமாகிறது. ஆய்வு முடிவுகளின்படி 13-14 வயதுக்குள் இரு பாலினத்தவருமே இதைப் பற்றிய தேடல் ஆரம்பித்து விடுவதுடன், முதல் அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்களும் சுயஇன்பம்

ஈர இரவுகள் (பதின் பருவமா, புதிர் பருவமா- 7)


வளர் இளம்பருவத்தில் நுழைந்த புதிதில், பலருக்குச் செக்ஸ் சார்ந்த கனவுகள் வருவது சகஜம்தான். சில நேரம் தெரிந்த நபர்கள்கூட அந்தக் கனவுக் காட்சிகளில் வரலாம்.
ஒருமுறை 15 வயது மாணவர் ஒருவர், தனக்குப் பாலியல் ரீதியான கனவுகள் அடிக்கடி வருவதாகவும், அது அவருடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் பாவம் என்று கருதுவதாகவும் கூறினார். 'தான் மோசமானவனாக மாறிவிட்டேன்' என்ற குற்றவுணர்ச்சியே இதுபோன்ற பதற்றங்களுக்குக் காரணம். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகள் பற்றிய ஆராய்ச்சியின்படி, அன்றாடம் நிகழும் பல சம்பவங்களால் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே கனவு. இது ஒரு பாதிப்பு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈர இரவுகள்
'சொப்பன ஸ்கலிதம்' இளம் பருவத்தினருக்குச் சிம்மசொப்பனம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியே தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் காசு பறித்து வருகின்றன பல கும்பல்கள்.
வளர் இளம்பருவத்தினர் எல்லோருக்கும் இந்த அனுபவம் சில முறையாவது

ஹார்மோன்களின் விளையாட்டு-(பதின் பருவம் புதிர் பருவமா- 6)




                 ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம்

பாலியல் பயணம் (பதின் பருவம் புதிர் பருவமா?)

‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக

நட்பு-வட்டமா?வலையா? (பதின் பருவம் புதிர் பருவமா? 5)

‘அவன் கூட டூ! உன்கூட பழம் விட்டுக்கட்டுமா?' என்று கேட்பது குழந்தைப் பருவ நட்பு. ‘மச்சி இன்னிக்கு ஒரு நாளாவது ‘கிளாஸை கட்' அடிக்கிறியா... சும்மா அடிச்சுப் பாரு மச்சி!' என்பது விடலைப் பருவ நட்பு.
நடத்தையை வைத்தே, மேற்கண்ட இரண்டு நட்புக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நட்புகள் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அமைவது. ஆனால், வளர் இளம்பருவத்தில் அமையும் நட்பு, ஒருவர் தேடித் தேர்வு செய்து அமைத்துக் கொள்வது. இதை சான்ஸ் எதிர் சாய்ஸ் (chance vs choice) என்று கூறுவதுண்டு.
வளர் இளம்பருவத்தில் தங்களுக்கு ஒத்த வயதுடைய, கருத்துடைய, விருப்பங்களுடைய நபர்களையே தேர்வு செய்து குழுவாகச் சேர்ந்துகொள்வார்கள். அதிலும் ஒரு சிலரைத் தங்கள் நெருக்கமான நட்புக்கென்று தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மையான நட்பு உருவாவதும், இந்த வளர் இளம்பருவத்தில்தான்.
நல்ல மாற்றமா?
இந்த நேரத்தில்தான் பெற்றோருக்குப் பதற்றமும் பயமும் ஏற்படும். தங்களிடம் நெருக்கமாக இருந்த மகன் / மகள் விலகிச்செல்வது போலத் தெரிவதும், புதிய நட்புகளிடம்

பாலியல் தொந்தரவும் பள்ளி புறக்கணிப்பும் (பதின்பருவம் புதிர் பருவமா-4)


சில நேரங்களில் வளரிளம் பெண்கள் பள்ளி செல்லும் வழியில் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. கேலிப் பேச்சு மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாதல், சக மாணவர்களால் காதலிக்கக் கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களும் பள்ளியைப் புறக்கணிக்கக் காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் வளரிளம் பெண்ணுக்கும் தாய்க்குமான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி பள்ளியைப் புறக்கணிப்பதாகச் சொல்லிப் பெற்றோர் அழைத்து வந்தார்கள். பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி வந்துவிடுவதாகவும், அதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும் காரணம் கூறினார்கள். பல முறை ஸ்கேன், மற்றப் பரிசோதனைகளை எடுத்துப் பார்த்ததில் வயிற்றுப் பகுதியில் எந்தத் தொந்தரவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்ததில், அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில்

கற்றல்திறன் குறைபாடு/Dyslexia- 4

             சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறி மனநல ஆலோசனைக்கு என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள். அந்த மாணவி மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். சமீபத்தில் கையில் பிளேடால் பலமுறை கீறப்பட்ட அடையாளங்கள் இருந்தன.
பெற்றோரிடம் கேட்டபோது, பள்ளிக்குச் செல்ல அவள் மறுப்பதாகவும், வேண்டுமென்றே இப்படிச் செய்வதாகவும் புகாரை அடுக்கினார்கள். ‘இவள் இருப்பதைவிட, செத்துவிட்டால் நல்லது’ என்கிற அளவுக்குத் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்ததில், டிஸ்லெக்சியா (Dyslexia) என்ற கற்றல்திறன் குறைபாடு பிரச்சினையால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கற்றல்திறன் குறைபாடு
கற்றல்திறன் குறைபாடு கொண்டவர்களின் மனவளர்ச்சியும் அறிவுத்திறனும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு எழுத்து வடிவங்கள் மற்றும் கணிதக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல், வாசித்தல் ஆகியவற்றில் அதீதப் பிரச்சினைகள் இருக்கும். வாய்மொழியாகப் பாடங்களை எளிதாகச் சொல்லும் இவர்களால், அதை எழுத முடிவதில்லை. அப்படியே எழுதினாலும்

யார் உங்கள் ரோல்மாடல் (பதின்பருவம் புதிர் பருவமா-3)


‘போதும்டி... ரொம்ப சீவி சிங்காரிக்காதே’ என்று கரித்துக்கொட்டும் அம்மாவைவிட, ‘ஆஹா... இன்னிக்கு எத்தனை பசங்க உங்கிட்ட புரபோஸ் பண்ணப் போறாங்களோ, தெரியலையே!’ என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கும் அம்மாக்களைத்தான், இன்றைய இளம்பெண்கள் பலருக்குப் பிடிக்கிறது.
‘சோம்பேறி... 8 மணிக்குத்தான் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறான்’ என்று திட்டும் அப்பாவைவிட, ‘என்னடா... ‘ஹேங் ஓவரா, எல்லாமே அளவா இருந்தாத்தான்டா நல்லது...’ என்று கேட்டுக்கொண்டே குளிப்பதற்கு டவல் எடுத்துத் தரும் அப்பாக்களை மகன்கள், அப்படிக் கொண்டாடுவார்கள்.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் என்று சொல்வார்கள், அதுதான் இந்தக் காலத்தின் தேவை.
வெளிப்படைத்தன்மை
எதிர்பாலினத்தவரின் ஏதோ ஒரு அம்சம் நம்மைப் பிடித்து இழுக்கிறது என்ற ஆர்வம் நம் வாரிசுகளிடம் இருப்பது இயற்கை. ஆனால், அந்த ஆர்வம் எல்லை மீறும்போது, பல விபரீதங்கள் நடந்தேறுகின்றன. வாரிசுகளின் ஆண், பெண்

நான் யார்?- பதின்பருவம் புதிர் பருவமா-2

         

 ‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.
ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்..

Saturday, 9 May 2015

யார் போதைக்கு அடிமை?


பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிபழக்கத்தைப் பற்றி விசாரித்தால் ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில் தான் முதலில் வரும். நாம் நமது நிலத்திற்கு எல்லைக்கோட்டை குறைத்தும் வரைந்து கொள்ளலாம் அல்லது பக்கத்து நிலத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அரசாங்க டாக்குமெண்ட்களில் என்ன இருக்கிறதோ அதுதான் சரியான எல்லையின் வரைமுறையாகும். அது போலத்தான் குடிப்பழக்கத்திற்கு ஒருவர் அடிமையா இல்லையா என்பதற்கும் சில வரைமுறைகள் இருக்கிறது. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தை பொறுத்தது அல்ல. கீழ்காண்பவைகளில் ஏதேனும்

Thursday, 30 April 2015

கலகக்கூட்டம் (MOB)


சற்றே பழைய காலத்து செய்தி என்றாலும் வரலாற்றில் மறக்க, மறைக்க இயலாத ஒரு நிகழ்வு. ஒரு தவறான செய்தி எப்படி பரவுகிறது, அது எப்படி ஒரு சாதாரண மனிதனையும் கலகக்காரனாக மாற்றுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் இருக்க முடியாது. அதுவும் தகவல் தொடர்பு என்பது கடித அளவில் மட்டுமே இருந்த காலத்தில். ஆனால் அது கற்றுக்கொடுத்த பாடம் மிகப்பெரியது
சாலெம் சூனியக் கலகம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மசாசுசெட் ( தற்போதைய டேன்வர் ) என்ற பகுதியில் 1692 ஆம் ஆண்டு சில இளம் சிறுமிகளுக்கு திடீரென்று ஆக்ரோஷம், வலிப்பு, பேய் பிடித்தது போல பேசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. அவர்களை மருத்துவர் பரிசோதிக்கும்போது

Wednesday, 29 April 2015

தூகத்தில் சிறுநீர் கழித்தல் ஒரு பிரச்சனையா? (Bedwetting)


தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளிடம் அடிக்கடி காணப்பட்டால் மனநல ஆலோசனை அவசியம். இதில் இரண்டு வகைகள் உண்டு. உதாரணமாக முதல் வகையில் பிறந்தது முதல் 10 அல்லது மேற்பட்ட வயது வரை கூட தொடர்ச்சியாக சிறுநீர் கழிப்பது பிரச்சினையாக இருக்கலாம். இப்பிரச்சினைக்கு நரம்பு அல்லது சிறுநீரக மண்டலங்களின் வளர்ச்சி குறைபாடு காரணமாக இருக்கலாம். இரண்டாம் வகையில் ஒரு குழந்தை 4 வயதிற்குள் தூக்கத்தில் முழுக்கட்டுப்பாட்டை

தூக்கத்தில் பேசுதல் & நடத்தல் ( Sleep walking & talking)


ஒரு மனிதனுக்கு சராசரியாக 6 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரம் அளவிற்கு தூக்கம் அவசியம். இது வயதைப்பொறுத்து மாறும். மனிதனின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தூக்கம் சரியாக அமைவது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பல உடல்நலக்குறைவுகள் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் தூக்கமின்மைக்கு முக்கிய காரணங்களாகும். மன அழுத்தம், பதட்டம் உட்பட பல காரணங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். தூக்க வியாதிகள் என்பது தூக்கத்தின் நேரம் குறைவது மட்டுமல்ல. போதுமான நேரம் தூங்கினாலும்

Monday, 27 April 2015

மனநோய்-நிஜமும் நிழலும் (Mental illness-Facts and Myths)


5 ல் ஒரு இந்தியர் தனது வாழ்வில் ஒரு முறையாவது மனநல மருத்துவம் செய்து கொள்ளும் அளவிற்கு லேசான அல்லது தீவிரமான மனநோயின் பாதிப்பிற்கு ஆளாகின்றார்.சராசரியாக 5-15% பேர் தீவிர மனஅழுத்த நோயினாலும்(depression), குறிப்பாக பெண்கள் சராசரிக்கு அதிக அளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஸ்கிஷோஃப்ரினியா(schizophrenia) என்று அழைக்கப்படும் மனச்சிதைவு நோய் ஆயிரத்தில் 3-4 பேரை பாதிக்கின்றது.90% வரையிலான ஆண்கள் வாழ்கையில் சில காலங்களாவது மது உட்பட போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.அதில் 50% க்கும் அதிகமானோர் போதைக்கு அடிமையாவதுடன் பலர் மனநோயினாலும் பாதிக்கபடுகின்றனர்.நாளொன்றிற்கு 350-400 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.குறிப்பாக தமிழ்நாடு இதில் முதல் இடம் வகிக்கின்றது.இந்தியாவில் சராசரியாக 30-35 லட்சம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் டெமன்ஷியா(dementia) எனும் ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மனிதனுக்கு உடல் நலம் எப்படி முக்கியமானதோ அந்தளவிற்கு மனநலமும் இன்றியமையாதது.உடல் உறுப்புகளை நோய்கள் தாக்குவது போல மனமும்

யார் உங்கள் குடும்ப மருத்துவர்? ( Who is your family doctor?)


ஒரு நகைச்சுவை காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியை சுற்றி பல டாக்டர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், உடனடியாக குடல் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்கவேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்டவேண்டும் என்றும் கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்களும் ஒவ்வொன்றை கூற நோயாளி மயங்கி விடுவார். இது ஒரு நகைச்சுவைகாகத்தான் என்றாலும் பதினந்து முதல் இருபது வருடங்களுக்கு முன்பு வரை இருந்து தற்போது மறைந்து வரும் மருத்துவ உலகின் ஒரு உண்மையை நினைவு கூற வேண்டிய கட்டாயமும் உள்ளது.
யார் இந்த குடும்ப மருத்துவர்?
இது ஒரு டாக்டர் பேமிலி என்று சொல்ல கேள்விபட்டிருப்போம். ஆனால் பேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர்

அனபாலிக் ஸ்டீராய்டு மனநல பாதிப்புகள் (Anabolic steroids)


அனபாலிக் ஸ்டீராய்டு இந்த வகை மருந்துகள் கேன்சர், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க மருத்துவதுறையில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இது மனித உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் (testosterone) என்ற ஹார்மோனை ஒத்த ஒரு மருந்தாகும். இது உடலின் தசைநார்களை பெருக்கமடையச் செய்து நல்ல புஷ்டியான தோற்றத்தை தரும் தன்மையுடையது.
தவறான உபயோகம்
இன்றைக்கு இளம் பெண்கள் பிரபல நடிகைகளைப் போல மெலிவான உடலமைப்பை பெற எவ்வாறு ஆசைப்படுகிறார்களோ, அதுபோல இளைஞர்கள் அர்னால்டு போல உடம்பில் பல படிக்கட்டுகளை வளர்க்க விரும்புகிறார்கள். எனவே உடற்பயிற்சிக் கூடங்களை நாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் சீக்கிரம் உடல் தசைபருமனை பெருக்க இந்த அனபாலிக் ஸ்டீராய்ட் மருந்துகளை ஊசிகளாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ உட்கொள்கின்றனர். மேலும் இந்த மருந்துகள் அதிக உத்வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் தருவதால் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் இளைஞர்களால்

ஆவிவடிவில் ஒரு ஆபத்து (Inhalant substance abuse)


பொதுவாக போதை பொருட்களை உபயோகிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது எளிது. ஆனால் தற்போது பிரபலமாகி வரும் சில போதை பொருட்கள் நிழல் உலக தாதாக்கள் போல. இவை வெளியில் தெரிவதில்லை, கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இவை இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களையும் சிறுவர்களையும் கிருமி போல் ஊடுறுவிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும்.
ஆவிவடிவில் ஒரு ஆபத்து
ஒருமுறை பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனின் நடவடிக்கைகளில் பல நாட்களாக மாற்றம் தெரிவதாகவும், அவன் அடிக்கடி தனது கர்சீப்பில் ஏதோ ஒன்றை வைத்து உறிஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்ததாகவும்  கூறினார். அதை வாங்கி பார்த்தால் பேனா எழுத்துக்களை மறைக்க பயன்படுத்தும் ஒயிட்னர்

Saturday, 25 April 2015

மனச்சிதைவு- உள் மற்றும் வெளிப்பார்வை (Schizophrenia- view from patients and society)


நோயாளியின் பார்வையில்

மனச்சிதைவு நோயாளியின் அறிகுறிகளெல்லாம் நமக்கு வித்தியாசமாக தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் உண்மையில் நடப்பது போல் தான் இருக்கும். அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்களால் குடும்ப நபர்கள் பல இன்னலுக்கு உட்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் புரிந்து கொள்வது மிக அவசியம். தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் என்று சொல்லப்படுவது உண்டு. அது போலத்தான் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்படும் நபர்களுக்குத் தான் அதன் வேதனை தெரியும். உதாரணமாக நாம் தனியாக இருக்கும்போது சில குரல்கள் மட்டும் நம்மை மிரட்டுவது போலவோ, மாடியிலிருந்து குதித்துவிடு என்று சொல்வது போலவோ கேட்டுக்கொண்டே இருந்தால் நமக்கு எவ்வளவு பயம் வரும். உண்மையில் வீட்டின் வெளியே

மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் (Symptoms of Schizophrenia)


அறிகுறிகள் என்ன?
  • நிஜத்தில் நடக்காத அல்லது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை உண்மையில் நடப்பது போல் மிக உறுதியான எண்ணம் கொண்டிருத்தல். உதாரணமாக ஒருவருக்கு எதிரிகள் இருப்பது போன்றோ அல்லது வீட்டில் உள்ளவர்கள் அவரை விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாக நினைத்தல், எல்லோரும் தன்னைக் குறித்தே கேலி அல்லது ரகசியம் பேசுவது போலவும் தோன்றுதல்.
  •   தன்னை கடவுளாகவோ, தனிச்சிறப்பு பெற்ற பிறவியாகவோ காண்பித்துக்கொள்ளுதல்
  •   வாழ்க்கை துணையின் மீது காரணமற்ற சந்தேகம், வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறான, தீவிரமான சந்தேக எண்ணம்
  •   மனதிற்குள் யாரோ

குழந்தைகளை எப்படி தண்டிப்பது? (how to punish children?)


தண்டனைகள் தேவையா?
பள்ளி ஆசிரியர் என்றாலே கையில் கம்புடன் நிற்பது தான் மனதில் பிம்பமாய் தோன்றும். ஆனால் இன்றைய நிலைமை வேறு, கம்பு எடுத்தால் அவருக்கு கைவிலங்குதான். குழந்தைகளுக்கு தண்டனைகள் கண்டிப்பாக தேவைதான், ஆனால் கொடுக்கும் விதம் அதைவிட அவசியம்.
  • தவறான செயல்கள் அவற்றின் தீவிரத்திற்கு ஏற்ப உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். காலம் தாழ்த்துவது எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.
  • தண்டனைகள் வயதுக்கு ஏற்றவையாக இருத்தல் அவசியம். ஆத்திரப்படுதலை தவிர்ப்பது நலம்.
  • குழந்தைகளுக்கு நாம் ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பது கண்டிப்பாக புரிந்திருத்தல் அவசியம்.
  • அறியாமல் செய்த தவறுகளை தண்டிக்க கூடாது. உதாரணமாக கையில் உள்ள டம்ளர் தவறி விழுவதால்

குழந்தையை கையாளும் முறைகள் ( handling children)


பொதுவாக கையாள வேண்டிய விஷயங்கள்
  • நாட்டமுள்ள நல்ல விஷயங்களை ஊக்குவிப்பது, தகுதி மற்றும் வயதுக்கு மீறிய விஷயங்களை தடை செய்வது
  • பிள்ளைகளின் தேவைகளை சரியாக புரிந்து கொள்ளுதல்
  • நம் விருப்பங்களை பிள்ளைகளிடம் ஒரு அளவுக்கு மேல் திணித்தல் கூடாது.
  • பெற்றோரின் மனநிலை, கோபங்கள், மனஸ்தாபங்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தல் தவிர்க்க வேண்டும்
  • மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற விஷயங்களில் கண்டிப்பை தளர்த்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அடிக்கிறது அல்லது கடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர் அதை கண்டிப்பார்கள், சில நேரங்களில்

யார் குழந்தையின் பெற்றோர் ( Who are the real parents?)


ஓடி விளையாடு பாப்பா என்று அறைகூவல் விடுத்த பாரதி இன்று மட்டும் இருந்திருந்தால் வீடியோகேமில் ஓட்டி விளையாடு பாப்பா என பாடியிருப்பார். கால் வலிக்க தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய் காசு கொடுத்து கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்து விட்டோம். கோடை விடுமுறை வேறு ஆரம்பித்துவிட்டது, பள்ளிநாட்களில் வீட்டில் இருக்கும் சில மணிநேரங்களிலேயே களபேரத்தை ஏற்படுத்தும் பிள்ளைகளை இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கபோகிறோமோ என்று பெற்றோர் புலம்புவதும் கேட்கத்தான் செய்கிறது.
கற்றலும் குணநலமும்
குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு

மனச்சிதைவு நோய் (What is Schizophrenia?)

  

மனிதனின் மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலை போலத்தான். பல விஷயங்களை உள்வாங்கி, உருவாக்கி, வெளிக்கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஏன், தூக்கத்தில் கூட கனவுத் தொழிற்சாலை இயங்குவதால் மனதிற்கு ஓய்வு என்பதே கிடையாது.
மனச்சிதைவு என்றால் என்ன?
மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பலர் திணறுவது உண்டு. நம் எண்ணங்களில் நிகழும் செயல்பாடுகள், ஜம்புலங்களின் உணர்ச்சிகள், பேசுவது மற்றும் பிறர் பேசுவதை புரிந்துகொள்ளுதல், விஷயங்களை பகுத்தாய்தல், கவனம் மற்றும் ஈடுபாடு, சமுதாயம் சார்ந்த பழக்கவழக்கங்கள் போன்ற பல விஷயங்கள் அன்றாட வாழ்விற்கு மிக முக்கியமானவை. இவை

Friday, 17 April 2015

வாட்ஸ்அப்-காத்திருக்கும் ஆபத்து ( Dangers of Whatsapp)

சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உபயோகிப்பது தற்போது மாணவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவருகிறது. ஒரு பழக்கமாகவோ, பொழுதுபோக்கு அம்சமாகவோ ஆரம்பிக்கும் இது பலருக்கு ஒரு போதைப்பொருளாகவே மாறிவிடுவது தான் அபாயமான ஒன்று.
அடிமையாதலின் அறிகுறிகள்
நாளுக்கு நாள் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல், மற்ற முக்கிய வேலைகளை ஒதுக்கிவிட்டு இதற்கு மிக முக்கியம் கொடுப்பது, ஒரு நாள் கூட மொபைல்போனோ அல்லது இன்டர்நெட் தொடர்போ இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை